தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் 2 தேங்காய்கள் வழங்க வேண்டும் - கோவையில் பா.ஜ.க விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி வரும் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,



வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கி தென்னை விவசாயத்தை காப்பாற்ற கோரி தென்னங் கன்றுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆர்ப்பாட்டக் களத்திலும் 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தேங்காய் கொடுத்து தேங்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் விளையும் முக்கிய உணவுப் பொருளான தேங்காய் கடந்த ஒரு வருடமாக தமிழக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் விலை மிகவும் குறைந்து கோடிக்கணக்கான தேங்காய்கள் தோப்பில் தேங்கி கிடக்கின்றன.

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான கொப்பரை தேங்காய்க்கு ரூ.108.65 வழங்கப்பட்டும், அதிமுக ஆட்சி காலத்தில் கிலோ ரூ.110க்கு விற்ற கொப்பரை தேங்காய் தற்போது திமுக ஆட்சி காலத்தில் ரூ.80 க்கு குறைந்தது. கடும் விலை சரிவால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதன் காரணமாக தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு தேங்காய்கள் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கும் பட்சத்தில், 2 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கான தேங்காய்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும்.

இதேபோல், பள்ளி சிறுவர் - சிறுமியர்களுக்கு மதிய சத்துணவுடன் சேர்த்து தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பாலை வழங்கினால், தாய்ப்பாலுக்கு இணையான மோனோலாரி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...