முன்னாள் போப், 16-ம் பெனடிக்ட் மறைவு: கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை

கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் மறைந்த முன்னாள் போப் ஆண்டவரின் ஆன்மா சாந்தியடைய, ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் மார் பால் ஆலப்பாட் தலைமையில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.


கோவை: முன்னாள் போப், 16-ம் பெனடிக்ட் மறைவையொட்டி அவரது ஆன்மா சாந்தியடைய, கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

கடந்த 10 ஆண்டுகளாக தனது ஓய்வு காலத்தை வாடிகனில் கழித்து வந்த நிலையில், உடல் மூப்பு காரணமாக தனது 95 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இரங்கல் கூட்டம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.



அதன்படி, கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் மறை மாவட்டம் சார்பாக, கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் மறைந்த முன்னாள் போப் ஆண்டவரின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.



ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் மார் பால் ஆலப்பாட் தலைமையில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிஷப் பால் ஆலப்பாட், மறைந்த போப் 16 ஆம் பெனடிக்ட் எட்டு ஆண்டு காலமே பதவியில் இருந்த போதும், கத்தோலிக்க சபையின் வளர்ச்சியிலும், திருச்சபையின் விசுவாசிகளுக்கு இறையியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், திருச்சபையின் போதனைகளை வெளியிடுவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.



சிறந்த இறை நேசராக விளங்கிய அவரது அஞ்சலி பிரார்த்தனை கூட்டத்தில், மறை மாவட்டத்தில் உள்ள அருட் தந்தையர்கள், மத போதகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்றார்.

ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் 2005 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார். அவர், 1977 முதல் 1982 ஆம் ஆண்டு வரை முனிச்சின் பேராயராக இருந்தபோது முறைகேடு வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள் புரிந்ததாக புகார் எழுந்த நிலையில், அதை ஏற்றுக்கொண்டு அவர் பதவி ஏற்று 8 ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்படி, 1415 ஆம் ஆண்டில் கிரிகோரிக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த முதல் போப், பெனடிக்ட் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...