இளைஞர்களிடையே சினிமா மோகம் மற்றும் போதை இல்லையென்றால் தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும் - கோவையில் பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல்

கோவை தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், மாணவர்களுடனான கலந்துரையாடலில், ஒரு அரசு சாராயத்திலிருந்து காசை பெற்று, மருத்துவத்துக்கு வழங்கினால், அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றார்.


கோவை: ஒரு அரசு, சாராயம் விற்பதில் இருந்து வரும் காசை கொண்டு, மருத்துவத்துக்கு வழங்குவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.



சினிமா மோகம் மற்றும் போதை ஆகியவற்றை எடுத்து விட்டாலே, தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும் என்று பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல் தெரிவித்துள்ளார்.



கோவை தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

கலந்துரையாடலின் போது, மாணவர் ஒருவரின் கேள்வக்கு பதிலளித்தவர், பெரும்பான்மையான இளைஞர்கள் யாரோ ஒருவர் நடிப்பதற்கு பெரிய கட் அவுட் வைத்து நேரத்தை வீணடிப்பதோடு, தாய் - தந்தை தரும் பணத்தை வீணடிப்பதாக பதில் அளித்தார்.



மேலும், பெரும்பான்மையான இளைஞர்கள் சினிமாவில் நடித்தால் அவர்களை பெரிய ஆளாக பார்ப்பதாகவும், சினிமாவில் நடித்து பிரபலமாகிவிட்டால் அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தமிழகத்தில் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கிறது.

இது மிகப்மிகப்பெரிய பலவீனம் என்று தெரிவித்தார்.

மேலும், அரசுக்கு நிதி தேவை என்றால் அதற்கு நிறுவனங்கள் தொடங்கி பணம் சம்பாதிக்கலாம் அரசு சாராயத்திலிருந்து காசை வாங்கி, மருத்துவத்துக்கு வழங்கினால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. 90% குற்றங்கள் நடப்பதற்கு மதுவும், போதையும் தான் காரணம். என்ன தான் அதை நியாயப்படுத்தினாலும், பாதிப்பு தான் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தவர்.



சினிமா மோகம் மற்றும் போதை ஆகியவற்றை எடுத்து விட்டாலே, தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும். இவை இரண்டும் இருந்தும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது என்றால் இவை இல்லையென்றால் இந்திய வல்லரசாகி இருக்கும் என்று தெரிவித்தார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...