கோவை பன்னிமடை அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் - விவசாயிகள் அச்சம்

கோவை பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் புகுந்தது. தோட்டத்தில் இருந்த அவரது வீட்டில் இருந்து யானைகள் உலா வருவதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான ஆனைகட்டி மற்றும் மாங்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவததை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை அங்குள்ள தோட்டங்களில் தினமும் இரவில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



நேற்று இரவு, பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்துள்ளது. தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வருவதை அவர்கள் வீடியோ எடுத்த நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...