கர்நாடக அரசு பேருந்தில் உதகைக்கு கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பறிமுதல்

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பொருட்களை, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. இதனால், சட்டவிரோதமாக ரேசன் அரிசி, மரம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக கர்நாடக மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உதகை மத்திய பேருந்து நிலையத்திற்கு, கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் KSRTC அரசு பேருந்தில், போதை பொருட்கள் கடத்தி வருவதாக உதகை நகர் மேற்கு காவல் நிலைய G1 காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் பேருந்தில், கர்நாடக அரசு பேருந்தில் சோதனை செய்த போது, 50 பண்டல் போதை வஸ்து (Hans) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவற்றை சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டியை காந்தராஜ் (33) என்ற நபர் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...