வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: திருப்பூரில் அதிவேகமாக பைக்கில் ஊர்வலம் சென்ற இளைஞர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்

திருப்பூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்திய இளைஞர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர்: வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மன்னரைப் பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊத்துக்குளி சாலையில் இருசக்கர வாகனத்தில் கூச்சலிட்டபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.



அப்போது, கருமாரம்பாளையம் அருகே வந்த போது, வாகனங்கள் விபத்துக்குள்ளானது.



அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் சட்டம் ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.



அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்களின் செயல், பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பபை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...