பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொதுமக்களுக்கான தொழில்.முனைவோர் மேம்பாட்டு திட்டப் பயிற்சி வரும் பிப்.16ல் துவக்கம்


பி.எஸ்.ஜி  கலை அறிவியல் கல்லூரி, கோவை எப் ஐ சி சி ஐ மகளிர் அமைப்பு ஆகியவை இணைந்து தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டு திட்டப் பயிற்சியினை வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் நடத்தவுள்ளது.

அகமதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இ டி ஐ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது. என் எஸ் டி இ டி பி, டி எஸ் டி ஆகிய அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு நிதிவுதவி அளித்துள்ளனர். 

இப்பயிற்சியானது தொழிலை திறம்பட நடத்துவது, நிதி பெரும் திட்டங்கள், தொழிலை தேர்ந்தெடுத்தல் மற்றும் அத்தொழிலின் வளர்ச்சியை அடைதல், தொழில் முனைவோர்களுக்கான திறன், திட்டம் குறித்து அறிக்கை தயாரித்தல், சந்தை குறித்து ஆராய்தல், தொழிலை நிர்வகித்தல் மற்றும் வரி குறித்தான நடைமுறைகள் ஆகியவை குறித்து இப்பயிலறங்கில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பெற பி.எஸ்சி, பி.டெக், பிஇ பட்டதாரிகள், அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோவில் 2 மற்றும் 3 வருட பயிற்சி மேற்கொண்டவர்கள் என 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து தரப்பினரும் பங்குபெறலாம்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் அவர்களது முழு விபரங்களையும் [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...