டோனி & கை எஸ்சென்சுவல்ஸ் என்பது ஒரு சர்வதேச அழகு நிலையமாகும். தற்போது தமிழகத்தில் டோனி & கை-யின் 110-வது அழகு நிலையக்கிளை ஈரோட்டில் இன்று துவங்கப்பட்டது.

டோனி & கை ஈரோடு புதிய கிளையினை திரைப்பட நடிகை ஸ்ருஸ்டி தாங்கே, இன்று துவக்கி வைத்தார். இம்மையத்தின் மூலம் மக்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை சிறப்பாக உணரமுடியும்.
இத்துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டோனி & கை நிறுவனத்துடைய இந்திய நாட்டின் மாஸ்டர் பிரான்சிஸ் சேம் பால், பால்சன்ஸ் குழுமத்தின் சிஇஓ ப்ளஸ்சிங் ஏ மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த அழகு நிலையமானது ஈரோட்டில் உள்ள ரிலையன்ஸ் மாளின் எதிரே மிகச் சிறப்பாக 1800 சதுரடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில் பல்வேறு விதமான முடி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட சேவைகளும் இருபாலினருக்கும் வழங்கப்படவுள்ளது. முடி திருத்துதல், இரசாயனங்கள் கொண்டு அழகுபடுத்துதல், மேணிக்யூர், கெராட்டின், மேக்கப், ஹேர்ஸ்பா மற்றும முடியை நேராக்குதல் ஆகிய சேவையினை இளம் தலைமுறையினர் விரும்பி பெருகின்றனர் என ஈரோடு டோனி & கை-யின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார்.