ஒப்பந்த செவிலியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து கோவையில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்த செவிலியர்கள்

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் 200 க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணி செய்தனர்.


கோவை: கொரோனா தொற்று பரவலின் போது, மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் 3,200 செவிலியர்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் நீடித்ததால் அரசின் கோரிக்கைக்கு இணங்க தொடர்ந்து செவிலியர்களை பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியுடன் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், பணி நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்த்த நிலையில் இரண்டு தினங்களாக ஒப்பந்த செவிலியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு ஆதரவு தரும் விதமாக, செவிலியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக செவிலியர்கள் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சுமார் 200 எம்.ஆர்.பி. செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...