கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை..!

கோவை பொள்ளாச்சி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 1.3 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற பால்பாண்டி என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து, நீதிமன்றம் உத்தரவு.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த திவான் புதூர் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் மலையாண்டி பட்டணத்தில் இருந்து கோட்டூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாகன தணிக்கையில் இருந்த குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் பால்பாண்டியை பிடித்து சோதனை செய்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோட்டூர் அருகே புளியமரத்தடியில் சுமார் 1.3 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் இவர், பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை மலிவு விலையில் வாங்கி, அதை அதிக லாபத்தில் கேரளாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து பால்பாண்டி குற்றவாளி என நீதிபதி சரவணபாபு அறிவித்தார்.

தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற குற்றத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறை தண்டனை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...