கழிவுப்பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் தொடரும் நெருக்கடி

கழிவுப் பஞ்சு விலை உயர்வால் நூல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் முதல் தர கழிவுப் பஞ்சு மூலம் ஓபன் எண்ட் (ஓஇ) மில்களில் நூல் தயாரித்து, ஜீன்ஸ், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பஞ்சு விலை குறைந்த போதும் கழிவுப் பஞ்சு விலையை நூற்பாலை நிர்வாகத்தினர் குறைக்காததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு ஓபன் எண்ட் கழிவுபஞ்சு நூற்பலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “முதல் தர கழிவுப் பஞ்சு (கோம்பர் நாயில்) ரூ.140-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. இன்று பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.60 ஆயிரமாக உள்ள நிலையில் கழிவுப் பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.80-க்கு கிடைத்தால்தான் ஏற்புடையது.

நூற்பாலை தொழில்துறையினரின் இந்த நடவடிக்கையால் கழிவுப் பஞ்சு தொழில், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளிச் சங்கிலி தொடரிலுள்ள பல தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜவுளித்தொழிலில் எந்த ஒரு குறிப்பிட்ட துறை மட்டும் அபிரிமிதமான லாபத்தை ஈட்டி மற்ற தொழில்களை பாதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் நூற்பாலை நிர்வாகத்தினர் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை”என்றார்.



மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “கடந்த 1984-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பஞ்சு விலையில் 45 முதல் 50 சதவீதம் வரை தான் கழிவுபஞ்சு விற்பனை செய்யப்பட்டது. இன்று பஞ்சு விலையில் 75 முதல் 80 சதவீதம் வரை கழிவுப்பஞ்சு விலை உள்ளது. கழிவுப் பஞ்சு நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆடை தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

விலை ஏற்றத்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுடன் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதை பயன்படுத்தி ஜவுளிப்பொருட்களை அதிகளவு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. எனவே கழிவுப் பஞ்சு நியாயமான விலையில் கிடைக்க நூற்பாலை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

நூற்பாலை தொழில்துறையினர் கூறும்போது, “பஞ்சு விலையில் நிலவும் நிலையற்ற தன்மையால் நூற்பாலைகள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனைக்கு வரும் முதல் தர கழிவுப் பஞ்சின் அளவு 40 சதவீதம் வரை குறைந்துள்ளது” என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...