குப்பையில்லா நகரமாக கோவையை மாற்றுவோம்..! - களத்தில் இறங்கிய என்சிசி மாணவர்கள்

கோவை சுங்கம் குளக்கரையில் உள்ள குப்பைகளை, 200க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் இணைந்து சுத்தம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி கல்லூரி என்சிசி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று சுங்கம் பகுதியில் உள்ள குளக்கரையில் இருந்த குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர் அகற்றினர்.



இதில் ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலைப்பள்ளி, சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி, சர்வஜனா மேல்நிலை பள்ளி, நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.

மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்த வேண்டாம், குப்பைகளை குப்பை தொட்டில் போட வேண்டும், சுற்றுசூழலை பேணி காக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தேசிய மாணவர் படை கோவை மாவட்ட அதிகாரி குமரன் ஒருங்கிணைத்தார்.

ஆறாவது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...