'பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்க்க வேண்டும்..!' - கோவை துடியலூரில் பாஜக போராட்டம்

பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை துடியலூரில் பாஜக விவசாய அணி சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



கோவை: தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு, தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழக அரசை வலியுறுத்தி, "விலையில்லா தேங்காய் வழங்கும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக துடியலூரில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



அப்போது பேசிய ஜி.கே.நாகராஜ், தென்னை விவசாயிகளின் வாழ்வதாரத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் தேங்காயின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு மதிய உணவில் தேங்காய் பால் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு, தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.



இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேங்காய் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.



பாஜக நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...