சாலையில் நடந்து சென்றவரை தாக்கும் யானை - பரபரப்பான சிசிடிவி வீடியோ

கூடலூர் பகுதியில் பிடித்து சீகூர் வனப்பகுதியில் விடப்பட்ட பிஎம்-2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பத்தேரி நகரில் புகுந்து ஒருவரை தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சுற்றி திரிந்த பிஎம்-2 மக்னா யானை, 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதபடுத்தியதுடன் 2 பேரையும் தாக்கி கொன்றுள்ளது.

இதனையடுத்து கடந்த மாதம் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு சீகூர் வன பகுதியில் விடபட்டது. ஆனால் அந்த யானை முதுமலை வழியாக கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனையடுத்து கும்கி யானைகளின் உதவியுடன் கர்நாடக வன பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த யானை திடீரென. கேரளா மாநில எல்லையில் உள்ள முத்தங்கா வனப்பகுதிக்குள் சென்றது.

முத்தங்கா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்த அந்த யானை இன்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி நகருக்குள் புகுந்தது.



முக்கிய சாலைகளில் உலா வந்த அந்த யானை அதிகாலை நேரத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவரை தாக்கியது. அதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அந்த யானை வேறு பகுதிக்கு ஓடியது. இதனிடையே மக்னா யானை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...