ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா விழா - களைக்கட்டிய தோடர்களின் பாரம்பரிய நடனம்

ஊட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனத்தை ஒட்டி நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் தோடர் பழங்குடியின ஆண்கள் ஒன்று கூடி ஆடிய பாரம்பரிய நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.



நீலகிரி: ஊட்டியிலிருந்து முத்தொரை பாலாடா செல்லும் சாலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டிற்கான 111-ஆம் ஆண்டு ஆரூத்ரா விழா நேற்று தொடங்கியது.



அதனை தொடர்ந்து இன்று அதிகாலை தேரின் வடத்தை பிடித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடக்கி வைத்தார். தேரை நீலகிரி மாவட்டத்தின் பூர்வ குடிகளான தோடர் பழங்குடியின ஆண்கள் கோவிலில் இருந்து உதகை மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் வழியாக ஊட்டி மாரியம்மன் கோவிலுக்கு இழுத்து வந்தனர்.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன. அதனை தொடர்ந்து தோடர் இன பழங்குடியின ஆண்கள் மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தியவாறு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடையுடன் நடனமாடியது சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் மீண்டும் பவானீஷ்வரர் தேர் காப்பி ஹவுஸ் சந்திப்பு வரை சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லபடுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...