திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக பிரவீன்குமார் அபினவு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு உதயமானதற்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.

இதில் திருப்பூர் மாநகர காவல் துறையின் 11 வது காவல் ஆணையராக சேலம் சரகத்தில் பணியாற்றி வந்த டிஐஜி பிரவீன் குமார் அபினவு இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார் அபினவு, திருப்பூர் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கப்படும் என்றும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு முற்றிலுமாக பணியாற்றுவேன் என்றும் கூறினார்.
இதில் திருப்பூர் மாநகர காவல் துறையின் 11 வது காவல் ஆணையராக சேலம் சரகத்தில் பணியாற்றி வந்த டிஐஜி பிரவீன் குமார் அபினவு இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார் அபினவு, திருப்பூர் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கப்படும் என்றும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு முற்றிலுமாக பணியாற்றுவேன் என்றும் கூறினார்.