கோவை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா - இடிகரை அரசுப் பள்ளி முதலிடம்!

கோவை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் இடிகரை அரசுப் பள்ளி அதிக பரிசுகளைப் பெற்று கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.


கோவை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் நடந்த கலைத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கலைத்திருவிழாவில், கோவை இடிகரை அரசு பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் கணியன் கூத்து, தேவராட்டம், மனிநேயப்பாடல் பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றனர்.

அதே போல் 6வது முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் வீதி நாடகம், கும்மி நடனம், மனிதநேயபாடல், மனதில் பட்ட இயற்கை காட்சிகளை வரைதல் பிரிவுகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் உருமி இசைக்கருவி, இணைய கருத்துருவாக்கம், பானை ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்றாம் இடத்தைப் பெற்று கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் அதிக அளவு பரிசுகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.



இதைத் தொடர்ந்து கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் சித்ரா தலைமையில் இன்று பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தியாகராஜன் பங்கேற்று சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.



மேலும் சென்னை மொபைல் சார்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...