கோவையில் ஜுவல் ஒன் நிறுவனத்தின் 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' புதிய பிரிவு துவக்கம்

கோவை ஜுவல் ஒன் நிறுவனத்தில், 'பை டைமண்ட் ஜுவல்லரி' எனும் புதிய பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. கிராஸ்கட் ரோட்டில் அமைந்து உள்ள ஜுவல் ஒன் நிறுவனத்தில், 500 சதுர அடி பரப்பளவில், 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' என்ற வைர விற்பனை பிரிவு, புதியதாக துவக்கப்பட்டுள்ளது.



இது குறித்து ஜுவல் ஓன் முதன்மை நிர்வாக இயக்குனர் பி.ஜி.கிஷோர் பேசுகையில்:– எம்ரால்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஜுவல் ஒன் நிறுவனத்தின், சிறந்த கட்டமைப்பு மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம், வைர நகை வடிவமைப்பு மற்றும் விற்பனையில், எங்கள் நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகிறது. 

எங்களது நிறுவனத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வைரம் சார்ந்த அனைத்து பணிகளும், எங்கள் நிறுவனத்திலேயே நடைபெறுவதனால், குறைந்த  விலையில், வைரங்களை விற்பனை செய்ய முடிகிறது. 3.5 லட்சம் டிசைன்கள் தமிழகத்தில் 13 இடங்களில், ஜுவல் ஒன் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர, மும்பை, கேரளா, பெங்களூர், சிங்கப்பூர் மற்றும் மலேசிய உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளது. 

புதிய பிரிவுகளில், நவீன மற்றும் பாரம்பரிய, கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட, தங்கம் மற்றும் பிளாட்டினத்துடன் கூடிய, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்பிலான, வைர நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மனநிறைவே, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசனின், முக்கிய குறிக்கோளாகும். எனவே, எங்களது வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் விற்பனை செய்யும் வைர நகைகளுக்கான தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதில், வைரத்தின் தரம், வண்ணம், எடை ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் வழங்கும் வடிவமைப்பினை 20 நாட்களில் செய்து தருகிறோம். துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு காரட் சவர நகைக்கு, ரூ.5 ஆயிரம் வீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.



விழாவில், நிர்வாக துணை பொதுமேலாளர் முத்துக்குமார், வைர பொருட்களின் தலைமை அதிகாரி சஞ்சேஷ், மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி விஜயக்குமார், மேலாளர் வாசுதேவ ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...