கோவையில் 'புகையில்லா போகி பண்டிகை' கொண்டாட வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

போகிப் பண்டிகையையொட்டி கோவை மாநகராட்சியில் புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ வரும் 14.01.2023 அன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு “புகையில்லா போகி”யை கடைபிடிக்கும்‌ விதமாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ வீடுகளில்‌ சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும்‌, மக்காத குப்பைகள்‌, அபாயகரமான குப்பைகள்‌ மற்றும்‌ இதர குப்பைகளை பொது இடங்களிலோ, குப்பைத்‌ தொட்டிகளிலோ மற்றும்‌ காலி இடங்களிலோ வீசி எரிய வேண்டாமென்றும்‌, தீ பற்ற வைத்து எரித்து விட வேண்டாம்.

பொதுமக்கள்‌ தங்கள்‌ வீட்டில்‌ சேகரிக்கப்படும்‌ குப்பைகளை தனித்தனியாக பிரித்து தினசரி குப்பைகளை சேகரிக்க வரும்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ வழங்கி “புகையில்லா போகி” பண்டிகையாக கடைபிடித்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதியை தூய்மையாக வைத்துக்‌ கொள்ள பொதுமக்களுக்கு இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...