கோவை மாவட்டம் வடக்கு வட்டம், சின்னதடாகம் கிராமத்தில் வரும் 15/02/2017 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.