நீலகிரி காட்டேரி அருகே காட்டு யானை விரட்டியதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - பரபரப்பு..!

காட்டேரி அடுத்த பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற காட்டு யானை விரட்டியதால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காட்டு யானை கூட்டம் ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட குன்னூர் வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில் அந்த கூட்டம் வனப் பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து சாலை ஓரங்களிலும் தேயிலை தோட்டங்களிலும் சுற்றி திரிந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி கடந்து சென்று வருகின்றன.



இந்த நிலையில் இன்று காலை யானை கூட்டம் காட்டேரி பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற போது, சாலையில் இருந்த பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்தியதால், அச்சமடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் யானைகள் தனது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றன.



இந்த யானை கூட்டம் காட்டேரி, மரப்பாலம், டபுள் போஸ்ட்டு ஆகிய பகுதிகளில் உலா வருவதால் குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆறு குழுக்களாக பிரிந்து அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், பர்லியார் மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...