கோவையில் வடிவேலு பாணியில் கிணற்றை காணவில்லை என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள் முழக்கம் - பரபரப்பு..!

கோவை தீத்திப்பாளையம் அடுத்த விவேகானந்தர் நகரில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை ஆக்கிரமிப்பை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் கிணற்றை காணவில்லை என்ற பதாகைகளுடன் முழக்கம்.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனையை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இதனை கண்டிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கிணற்றை காணவில்லை என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மேலும் மனை பிரிவுகளில் உள்ள கிணற்றையும் காணவில்லை.

எனவே ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைப்பதோடு கம்பி வேலியிட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்களது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளுடன் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....