பிடிபட்டது PM2 மக்னா யானை! - நிம்மதியில் நீலகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்துவந்த PM2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, பாடந்தொரை, வாழவயல் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக PM2 மக்னா சுற்றித் திரிந்தது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய PM2 மக்னா யானை, அரிசி போன்ற உணவு பொருட்களையும் சாப்பிட்டு வந்தது.

மேலும், பொதுமக்கள் 2 பேரையும் அடித்துக்கொன்றதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் PM2 மக்னா யானையை வனத்துறை உடனடியாகப் பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த மாதம் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பிடிபட்ட யானையானது முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல பகுதியில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், PM2 மக்னா மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனை தடுத்து நிறுத்திய தமிழக வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் கேரளா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அப்போது, முத்தங்கா வனப்பகுதிக்குள் நுழைந்த PM2 மக்னா யானை, வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி நகரினுள் புகுந்து ஒருவரை தாக்கியது.



இதையடுத்து, கேரளாவிலும் அட்டூழியத்தைத் தொடங்கிய PM2 மக்னா யானையைப் பிடிக்க அம்மாநில வனத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை PM2 மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்டது.



மேலும், இந்த யானையை முத்தங்காவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பரமாரிக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. PM2 மக்னா யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்த கேரள அரசு மற்றும் வனத்துறைக்கு அம்மாநில மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...