பிடிபட்டது PM2 மக்னா யானை! - நிம்மதியில் நீலகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்துவந்த PM2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, பாடந்தொரை, வாழவயல் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக PM2 மக்னா சுற்றித் திரிந்தது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய PM2 மக்னா யானை, அரிசி போன்ற உணவு பொருட்களையும் சாப்பிட்டு வந்தது.

மேலும், பொதுமக்கள் 2 பேரையும் அடித்துக்கொன்றதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் PM2 மக்னா யானையை வனத்துறை உடனடியாகப் பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த மாதம் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பிடிபட்ட யானையானது முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல பகுதியில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், PM2 மக்னா மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனை தடுத்து நிறுத்திய தமிழக வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் கேரளா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அப்போது, முத்தங்கா வனப்பகுதிக்குள் நுழைந்த PM2 மக்னா யானை, வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி நகரினுள் புகுந்து ஒருவரை தாக்கியது.



இதையடுத்து, கேரளாவிலும் அட்டூழியத்தைத் தொடங்கிய PM2 மக்னா யானையைப் பிடிக்க அம்மாநில வனத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை PM2 மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்டது.



மேலும், இந்த யானையை முத்தங்காவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பரமாரிக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. PM2 மக்னா யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்த கேரள அரசு மற்றும் வனத்துறைக்கு அம்மாநில மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...