கோவை குருடம்பாளையத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை ஒன்றியச் செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு இன்று முதல் பொங்கல் சிறப்புத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக, கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியினை ஒன்றிய செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் ஆறுச்சாமி, குருடம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி அருணா நகர் சண்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சகா விக்னேஷ், வார்டு கவுன்சிலர் வளர்மதி, கிளைச் செயலாளர் சுரேஷ், தினகரன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி பூபதி, நிர்வாகிகள் அம்மன் கனகராஜ், ஸ்ரீதர், தில்லை நடராஜன், மணிகண்டன், தியாகராஜன், தலைமைக் கழகப் பேச்சாரளர் உடுமலை தண்டபாணி, ரஞ்சித், ஆறுமுகம், ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...