கோவை சூலூரில் ஆளுநர் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி சூலூரில் திமுகவினர் ஆளுநர் உருவப்படத்தை எரித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் கருத்துக்கள் சிலவற்றை அவர் தவிர்த்துவிட்டார் என திமுக குற்றம்சாட்டியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியக் கொண்டிருந்தபோது, ஆளுநர் திடீரென அவையிலிருந்து வெளியேறினார்.



தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலை சந்திப்பில் திமுகவினர் நேற்றிரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி முழக்கங்களை எழுப்பிய திமுகவினர், மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.



அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவியின் உருவப்படங்களை சாலையில் நடுவே நின்றவாறு திமுகவினர் தீயிட்டுக் கொளுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பியதால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...