உதகையில் ஜீரோ டிகிரி வெப்பம் - உறைபனியால் முடங்கிய இயல்பு வாழ்க்கை!

நீலகிரி மாவட்டம் உதகையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை வெப்பநிலை 0 டிகிரிக்கு சரிந்து, உறைபனி பொழிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது.



நீலகிரி: மலைகளின் ராணி என்ற பெருமைக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒன்று. குளிர்காலங்களில் இங்கு அதிகப்படியான குளிர் மற்றும் உறைபனிப் பொழிவு இருக்கும்.



தற்போது, குளிர்காலம் என்பதால், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் உறை பனிப்பொழிவு காணப்பட்டது.

உதகையில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரான சூழல் நிலவியது.



இந்த நிலையில், உதகை அருகே உள்ள தலைகுந்தா, அவலாஞ்சி, காந்தள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை O டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அரசு தாவரவியல் பூங்காவில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது.

இதனால், உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை அதிகப்படியான உறைப் பனிப்பொழிவு காணப்பட்டது.



உதகை குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, எச்.பி.எஃப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்கள், பச்சை புல்வெளிகளில் உறை பனி படிந்து, வெள்ளை கம்பளம்போல் காட்சி அளித்தது.



அதுமட்டுமின்றி, அப்பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும், விவசாய பயிர்களின் மீதும் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இந்த உறைபனியால் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

Newsletter

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...