கோவையில் மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானைகள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை சின்ன தடாகம் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டு யானைகள், அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தீவனப் பொருட்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.

இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் அவ்வப்போது ஊர் பகுதிக்குள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்குமுன்பு அதிகாலையிலேயே அங்குள்ள சாலைகளில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்துவந்தனர்.

அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் அதிரடியாக நுழைந்தன.



அங்குமிங்கும் நடமாடிய யானைகள், தோட்டத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் நுழைந்து, அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு,புண்ணாக்கு, மக்காச்சோள உள்ளிட்ட தீவனங்களை உண்டு சென்றுள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால், சின்னதடாகம் மற்றும் பாப்பநாய்க்கன் பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இதனைத் தொடரந்து, அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரின் தோட்டத்திற்குள்ளேயும் இந்த யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை, அப்பொழுதே வனத்துறை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தால் மட்டுமே தங்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...