கிராம பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு




வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கிராமப் பகுதிகளுக்குச் சென்று நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், செட்டிபாளையம் ஊராட்சியில் இன்று (11.02.2017) வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், சோளம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டதுடன் அப்பகுதி விவசாயிகளிடம் தங்கள் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் விபரங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டதை அலுவலர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்பொழுதே அதில் பெயர் திருத்தம், மற்ற பதிவுகள் விடுப்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். பண ஒதுக்கீடு வந்த பின்னர் பெயர் மாற்றமோ, மற்ற பெயர் சேர்த்தல் விபரங்கள் விடுதலோ இருந்தால் சரி செய்ய இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவணம் மற்றும் வைக்கோல் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. விரைவில் தீவனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து ஓராட்டுக்குப்பை ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டம் அரசம்பாளையம் ஊராட்சி, பானப்பட்டி ஊராட்சி, அக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டதுடன் விவசாயிகளிடம் பதிவு செய்யப்பட்ட விவரம் குறித்து கேட்டறிந்ததுடன் இதேபோல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கண்கெடுக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து பதிவு செய்து கொள்ள விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) சுரேஷ், மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டன். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...