ஆளுநரின் உருவ பொம்மை எரித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்க..! - கோவையில் பாஜகவினர் போராட்டம்

கோவையில் தமிழக ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற முயற்சிப்பதாகவும், சட்டப்பேரவை விதிகளை மீறுவதாகவும், ஜனநாயக மரபுகளை கடைபிடிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறி அவரின் உருவ பொம்மை மற்றும் புகைப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.



இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்குக் கண்டனம் தெரிவித்து சித்தாபுதூரில் பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று, தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் உருவபொம்மையை எரித்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பாஜகவிர் அப்போது வலியுறுத்தினர்.



இதையடுத்து, அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறுகையில், "திராவிடர் கட்சியினர் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மாநிலச் சட்டத்திற்கும் புறம்பானது. இச்செயல் தமிழகத்திற்கு அவமானத்தைத் தேடித்தரும். திக மற்றும் திமுகவினரின் உந்துததாலேயே இந்தச் செயல் நடந்துள்ளது. உருவபொம்மை எரிப்பில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...