கோவையில் நோ பார்க்கிங்கில் நின்ற வாகனங்களுக்கு பூட்டு, ரூ.500 அபராதம் - போக்குவரத்து போலீசார் அதிரடி!

கோவை ரயில் நிலைய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக, நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து போலீசார், ரூ.500 அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் தினம் தினம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முக்கிய சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் முக்கிய சாலைகளில் நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுவது மட்டுமல்லாது, டிராபிக்கை கட்டுப்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று கோவை ரயில் நிலைய சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களின் பின் பக்க சக்கரத்தில் இரும்பினால் ஆன காப்பை பூட்டி வைத்தனர்.



இதையடுத்து போக்குவரத்து போலீசார், அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர். மேலும் இதுபோன்ற நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று பொதுமக்களுக்கு எச்சரித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...