கோவையில் நோ பார்க்கிங்கில் நின்ற வாகனங்களுக்கு பூட்டு, ரூ.500 அபராதம் - போக்குவரத்து போலீசார் அதிரடி!

கோவை ரயில் நிலைய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக, நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து போலீசார், ரூ.500 அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் தினம் தினம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முக்கிய சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் முக்கிய சாலைகளில் நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுவது மட்டுமல்லாது, டிராபிக்கை கட்டுப்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று கோவை ரயில் நிலைய சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களின் பின் பக்க சக்கரத்தில் இரும்பினால் ஆன காப்பை பூட்டி வைத்தனர்.



இதையடுத்து போக்குவரத்து போலீசார், அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர். மேலும் இதுபோன்ற நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று பொதுமக்களுக்கு எச்சரித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...