புகையில்லா 'போகி' - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

திருப்பூரில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் மாசு ஏற்படுத்தும் வகையில் போகி தினத்தன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், நாளை முதல் நான்கு மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வரும்போது அவர்களிடம் எரிக்க வேண்டிய பொருட்களை கொடுத்து, புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கிராந்திகுமார் பாடி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய மாநகராட்சி ஆணையர், பொதுமக்கள் குப்பைகளை வழங்கும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்.

இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...