புகையில்லா 'போகி' - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

திருப்பூரில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் மாசு ஏற்படுத்தும் வகையில் போகி தினத்தன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், நாளை முதல் நான்கு மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வரும்போது அவர்களிடம் எரிக்க வேண்டிய பொருட்களை கொடுத்து, புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கிராந்திகுமார் பாடி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய மாநகராட்சி ஆணையர், பொதுமக்கள் குப்பைகளை வழங்கும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்.

இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...