வாரிசு படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை?- பல்லடத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளால் வாட்ஸ் ஆப்பில் வாரிசு பட டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் நாளை தமிழகம் முழுவதும் ரீலிஸ் ஆகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் நாளை வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.



இத்திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் 550 ரூபாய்க்குக் கிடைக்கும் என விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தகவல்கள் பரபரப்பட்டு, தற்போது வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளே விற்பனை செய்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



மேலும் வாரிசு திரைப்படத்தின் டிக்கெட்டை வாட்ஸ் ஆப்பில் அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீதும், திரையரங்கு மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...