வாரிசு படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை?- பல்லடத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளால் வாட்ஸ் ஆப்பில் வாரிசு பட டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் நாளை தமிழகம் முழுவதும் ரீலிஸ் ஆகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் நாளை வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.



இத்திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் 550 ரூபாய்க்குக் கிடைக்கும் என விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தகவல்கள் பரபரப்பட்டு, தற்போது வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளே விற்பனை செய்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



மேலும் வாரிசு திரைப்படத்தின் டிக்கெட்டை வாட்ஸ் ஆப்பில் அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீதும், திரையரங்கு மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...