கோவையில் பன்றி, பறவைக் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

கோவையில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம், நாகம்மா நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.



கோவை: மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பாதுகாப்பு சிறப்பு முகாம், கோவை மாவட்டம், பட்டினம் ஊராட்சி நாகம்மா நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இதில்,கோவை மண்டல கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் பெருமாள் சாமி, துணை இயக்குனர் டாக்டர் இளங்கோ, பட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் கோமதி செல்வகுமார் ஆகியோர் தலைமை வைத்தனர்.



இந்த முகாமில், மருத்துவர்கள் இருகூர் செல்வராணி, மங்கையர்கரசி, மாலதி தேவி, ராமநாதபுரம் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் பட்டணம் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராம மக்களும் தங்களது ஆடு, மாடு கோழி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு முகாமில் சிகிச்சை பெற்றனர்.

இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் அன்னூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் விநாயகம்பாளையம் காரமடை உள்பட கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...