ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (NOVACEST) நோவாசெஸ்ட் விழா மற்றும் SKAவினாடிவினா போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் சிறப்புரையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு நேரம், காலம் எண்ணாது, வகுப்பறை, பொது இடங்கள் என்றச் சூழல் கருதாது (E-Learning) இருபத்துநான்கு மணிநேரமும் படிக்கலாம் என்ற இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையாகிய (Online) வசதி வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அத்தகைய வாய்ப்பினை முறையான வகையில் மாணவர்கள் பயன்டுத்த வேண்டும் என்று கூறினார். 



கல்லூரி முதல்வர் ராதிகா மாணவர்களுக்கு உலகம் முழுவதும் கணினியுடன் நேரடித் தொடர்புடைய வசதிகள் சிதறிக் கிடக்கின்றன. கிடைக்கும் வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்துவதில்லை, எல்லோரும் அதனைப் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என தனது உரையில் கூறினார். SKA வினாடிவினா போட்டி  (Online) இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு சுழற்கோப்பையும் ரூபாய் 3000 பணப்பரிசாகவும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பி.வி.பி பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. (NOVACEST) நோவாசெஸ்ட் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைப் பெற்றன. கணினி அறிவியல், வணிகவியல், கணிதம் ஆகிய துறைகளில், துறை வாரியாகக் கருத்தரங்குகள், வினாடிவினா, வர்த்தகம், வார்த்தை விளையாட்டு எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு முதல் பரிசு ரூபாய் 500, இரண்டாம் பரிசு ரூபாய் 300 எனப் பணப்பரிசும், மூன்றாம் பரிசு சான்றிதழுமாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவியர்க்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...