பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா - நீதிபதிகள் பங்கேற்பு

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் அடுப்பு பற்ற வைத்துப் பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலையிட்டு பொங்கல் விழாவை வழக்கறிஞர்கள் கொண்டாடினர்.



இதைத்தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது.



இவ்விழாவில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...