சர்வதேச யோகா போட்டி - சாதனை படைத்த திருப்பூர் குட்டீஸ்..!

புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த மாணவி சக்தி சஞ்சனா மற்றும் மாணவன் சீட்டீஸ் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.



திருப்பூர்: புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் 28 வது சர்வதேச யோகா திருவிழா போட்டிகள் நடைபெற்றன. கடந்த 4ம் தேதி முதல் 7 ஆம் தேதிவரை நான்கு நாட்கள் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

சர்வதேச அளவிலான இந்த யோகா போட்டியில் ரஷ்யா மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இதில், ஒன்பது வயது முதல் மூத்த குடிமக்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில், 9 வயது முதல் 14 வயது வரையோருக்கான பிரிவில் திருப்பூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி சக்திசஞ்சனா (வயது12) கலந்து கொண்டு வீரபத்ராசனம் உட்பட 3 ஆசனங்கள் செய்து, இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.



இதேபோன்று, கணியூரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் சிட்டீஸ் (வயது10)-ம், யோகா போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, மாணவ-மாணவியருக்கு பதக்கமும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



சர்வதேச யோகாப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து சொந்த ஊர் திரும்பிய மாணவி சக்தி சஞ்சனா மற்றும் மாணவன் சீட்டீஸ்-க்கு யோகா பயிற்சியாளர்கள், உறவினர்கள், பள்ளி மாணவ-மாணவியர், தேசிய யோகா சாதனையாளர் யோகா வைஷ்ணவி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...