கோவையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக, கோவையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 240 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.


கோவை: பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் ஊருக்குச் சென்று வருவது வழக்கம். அதுவும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு வாரம் வரை தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், ஏராளமானோர் தங்களின் சொந்த ஊருக்குப் படையெடுப்பது வாடிக்கை.

இந்நிலையில் கோயம்புத்தூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக விழாக்கால சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகக் கோயம்புத்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட நான்கு பிரதான பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைக்கட்டி, சத்தியமங்கலம் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும் விழாக்கால சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

கோவை முதல் மதுரை வரை 100 பேருந்துகளும், கோவை முதல் தேனி வரை 40 பேருந்துகளும், கோவை முதல் திருச்சி வரை 50 பேருந்துகளும், கோவை முதல் சேலம் வரை 50 பேருந்துகளும் மொத்தமாக 240 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் உக்கடம், காந்திபுரம் போன்ற மாநகரப் பேருந்து நிலையங்களிலிருந்து இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப கூடுதலாகப் பேருந்துகள் இயக்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...