கிணத்துக்கடவு அருகே சமத்துவ பொங்கல் விழா - மக்களுடன் ஆட்சியர் கும்மியடித்து மகிழ்ச்சி!

கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சமீரன், பொதுமக்களுடன் கும்மியடித்து மகிழ்ச்சி.


கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை வரவேற்கும் விதமாகச் சமத்துவ பொங்கல் விழா மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் வடசித்தூர் பகுதி சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும், சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.



இந்த விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஷ்அகமது, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சி பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு கும்மியடித்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி, வாலிபால் போட்டியிலும் பொதுமக்களோடு கலந்து விளையாடினர். இதைத்தொடர்ந்து சமத்துவபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட வீடுகளும் ஆய்வு செய்தனர். இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...