கிணத்துக்கடவு அருகே சமத்துவ பொங்கல் விழா - மக்களுடன் ஆட்சியர் கும்மியடித்து மகிழ்ச்சி!

கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சமீரன், பொதுமக்களுடன் கும்மியடித்து மகிழ்ச்சி.


கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை வரவேற்கும் விதமாகச் சமத்துவ பொங்கல் விழா மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் வடசித்தூர் பகுதி சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும், சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.



இந்த விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஷ்அகமது, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சி பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு கும்மியடித்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி, வாலிபால் போட்டியிலும் பொதுமக்களோடு கலந்து விளையாடினர். இதைத்தொடர்ந்து சமத்துவபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட வீடுகளும் ஆய்வு செய்தனர். இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...