கோவை கவுண்டம்பாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயம்

கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியில் தாய் - தந்தை வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் சந்தியா (21) பள்ளிப்படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்றைய தினம் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டில் தனியாக இருந்த மகள் சந்தியாவை காணவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தியாவை அக்கம் பக்கத்தினர் வீடுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் கல்யாணசுந்தரம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் சந்தியாவை தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...