கோவை ஆனைக்கட்டி அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை - விவசாயிகள் அச்சம்..!

ஆனைக்கட்டி அடுத்த கோபனாரி பகுதியில் வெங்கடேஷ் என்பவரது தோட்டத்தின் வேலிகளை உடைத்து உள்ளே நுழைந்த யானை, தோட்டத்தில் இருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.



கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இந்த காட்டு யானைகள், அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.



இந்த நிலையில் கோவை ஆனைகட்டி கோபனாரி பகுதியில் உள்ள வெங்கடேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கம்பி வேலிகளை காட்டு யானை ஒன்று உடைத்துள்ளது.



இதையடுத்து தோட்டத்திற்குள் புகுந்த அந்த ஒற்றை யானை அங்கிருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.



இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், யானைகள் தோட்டங்களுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...