உதகையில் பூச்சி கொல்லி மருந்து (Hit) வெடித்து இருவர் படுகாயம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

உதகையில் குளிர் காய்ந்த போது பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பதை பதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது உறைபனி காலம் என்பதால் மாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இதனால் மாலை நேரங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி தீ மூட்டி குளிர் காய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தாவரவியல் பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு சிலர் குளிருக்கு தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் அட்டை பெட்டிக்குள் எளிதில் தீப்பற்ற கூடிய பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) இருப்பது தெரியாமல் தீயில் போட்டுள்ளார்.

இதனிடையே அட்டைப்பெட்டி நன்றாக எரிந்து கொண்டிருந்த நிலையில், அதில் இருந்த பூச்சிகொல்லி மருந்து டப்பா அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு குளிர் காய்ந்து கொண்டிருந்த வியாபாரி நந்து மற்றும் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த சம்பவத்தில், சங்கர் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக தப்பிய நிலையில் நந்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஹிட் டப்பா வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...