திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா - பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய காவலர்கள்

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கி வரும் போது, 'பொங்கலோ பொங்கல்' என முழக்கமிட்டு ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: தை திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



காவல் ஆய்வாளர் பிச்சையா தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா நிகழ்வில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.



காவல் நிலையத்திற்கு முன்பு வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து, பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை மற்றும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டும் ஆடிப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



மேலும் இந்த தெற்கு காவல் நிலையம் கடந்த ஆண்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...