நல்லாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.



கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் காருவாடு பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...