கோவை டூ சார்ஜாவுக்கு விமானம் மூலம் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் ஏற்றுமதி!

கோவையிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக சார்ஜாவுக்கு கடந்த 5 நாட்களில் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தை முதல் நாளான்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்பட்டுவருகிறது. பொங்கல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் வழிபாட்டின் பிரதானப் பொருட்கள். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையிலிருந்து சார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு, வெல்லம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் சார்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 5 நாட்களில் கோவையிலிருநது ஏழு டன் அளவுக்கு, பொங்கல் பண்டிக்கைக்கான கரும்பு, மஞ்சள் வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்பு மஞ்சள், வாழை இலை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...