கோவை அருகே வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்.


கோவை: கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமங்களில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து இயற்கைக்கு வணக்கம் செலுத்தினர்.



கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் நேர்டு தொண்டு அமைப்புடன் இணைந்து அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.



வெள்ளப்பதி கிராமத்தில் உள்ள பொதுஇடத்தில் வண்ண கோலமிட்டு புகையில்லா அடுப்புடன் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுப்பாடுகளின்றி ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து மாட்டுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மக்கள் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இயற்கை அன்னையிடம் வேண்டிக் கொண்டனர். அப்பகுதி மக்களுக்குப் பேராசிரியர் கனகராஜ், மருதாச்சல அடிகளார் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.



இதேபோல் சீங்கப்பதி கிராமத்திலும் பொங்கல் களைகட்டியது. பாரம்பரிய ஆடல், பாடலுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரங்கேறின. ஊர் நடுவே அமைக்கப்பட்ட கரும்பு பந்தலில் பொங்கல் பொங்கி, அறுவடை நன்றாக அமைந்த இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து, மகிழ்ச்சி பொங்கப் பொங்கல் பண்டிகையினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...