தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சரியான நபர் நான் இல்லை என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா தெரிவித்தார்.
கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆகியோர் தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் அடங்கிய பட்டியலை பொறுப்பு கவர்னரிடம் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோசைய்யா, பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை.
இன்று மாலையோ அல்லது நாளையோ இதுகுறித்து ஆளுநரின் கருத்து வெளியாகலாம். நானும் சாதாரண மக்களைப்போல் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறேன்.
பா ஜ க பின்னாலிருந்து செயல்படுவதும், அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுவதும் தனக்கு தெரியாது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.