முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

முதுமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்பு.


நீலகிரி: முதுமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. குறும்பர் பழங்குடியினர் இசை மற்றும் நடனத்துடன் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பொங்கல் வைத்துக் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்து உணவு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.



பின்னர் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், துணை கள இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சார்பாகத் தனித் தனியாகப் பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கியதும் அங்கிருந்த குறும்பர் இன பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார இசைக் கருவிகளை இசைத்து நடனமாடினர்.



இதனைக் கண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடினர். தொடர்ந்து யானைகளுக்குப் பொங்கல், சாதம், கரும்பு, வெல்லம், ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன. அதனை அங்குக் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனிடையே யானைகள் முகாமில் உள்ள விநாயகருக்குக் கோவிலில் பல ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று யானைகள் பூஜை செய்வதை வழக்கமாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு விநாயகர் கோவில் முன் வளர்ப்பு யானைகளை வைத்து பூஜை செய்யாமலும், யானை பூஜைகள் நடைபெறாததும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...