கோவை கோவில்மேடு பகுதியில் அனல் பறந்த கபடி போட்டி

பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவை கோவில்மேடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடி திறமைகளை வெளிக்காட்டிய வீராங்கனைகள்.


கோவை: கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது.

கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் செயல்பட்டு வருகிறது. 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இளைஞர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இருபாலருக்கும் கபடி போட்டி நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் 56ஆவது ஆண்டு விழா, மன்றத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் தை திருநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான ஆண், பெண் என இருபாலருக்கான கபடி போட்டி இன்று தொடங்கியது.



பெண்களுக்கான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த 10 அணிகள் மோதின. இதில் பெண்கள் அணியினர் நேர்த்தியான மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிக்காட்டினர். வேகம், விவேகம் என கபடி விளையாட்டில் பெண்கள் அணியினர் தங்களது திறமைகளைக் காட்டி விளையாடியது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.



பொங்கல் திருநாளை ஊர்மக்கள், பெண்கள் என கபடி போட்டியை கண்டுகளித்துடன் களத்தில் பெண்களின் அனல் பறக்கும் ஆட்டத்தைக் கண்டு வியந்தனர். நாளை நடைபெறும் ஆண்களுக்கான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த 20 அணிகள் மோதவுள்ள நிலையில் ஆடுகளம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுத்தொகையும், கேடயம் மற்றும் கோப்பைகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...