'எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன்..!' - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளையொட்டி கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு.



கோவை: தமிழ்நாட்டின் முன்னாள் மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள், மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், எம்ஜிஆர் ரசிகர்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவையில் தெற்கு தொகுதி 80வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



அதில், "துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



அத்துடன் எம்ஜிஆருடன் கமலஹாசன் சிறுவயதில் நடித்த "ஆனந்த ஜோதி" திரைப்படத்தின் புகைப்படமும், எம்.ஜி.ஆர் கமலஹாசனுக்கு விருது வழங்கிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளன.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு மக்கள் நீதிமய்யம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...