கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் கோவை பெரியகுளத்தினை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்


கோவை மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்படாமல் முற்றிலும் சிதிலமடைந்து  காணப்படுகிறது. சரியான பராமரிப்பு இன்மை, சீமைக் கருவேளமரங்கள்  அதிகரிப்பு, ஆகாயத் தாமரை உள்ளிட்டவையால் கோவை மாவட்டத்தில் பல குளங்கள் இருந்ததற்கான சாட்சியங்களே இல்லாத அளவுக்கு அழிந்துபோய்விட்டன.

அவ்வாறாக தற்போது அழிந்துவரும் குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவையில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் சமூக வளைதலங்கள் மூலம் ஒன்றிணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.



இவ்வமைப்பின் சார்பில் இன்று கோவை பேரூரில் அமைந்துள்ள பெரியகுளத்தினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேல் குளத்துப் பகுதியில் வளர்ந்திருந்த சீமைகருவேள மரங்கள், புதர்செடிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது. இவர்களுக்கு உறுதுணையாக மூன்று ஜே சி பி இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி  உள்ள குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரந்தோறும் ஞாயிறன்று மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குளங்களுக்குச் சென்றும் குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மை செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.

தற்போது இந்த அமைப்பில் 150 பேர் இணைந்து இன்று பேரூர் பெரியகுளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டோம். இதில் 15 ஏக்கரில் இருந்த சீமைகருவேள மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள மரங்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில், மேலும் சில தன்னார்வ நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு தேவையான நிதிவுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...